×

எருமப்பட்டி அருகே மூதாட்டி உள்பட 2 பேரை கடித்து குதறிய தெரு நாய்

சேந்தமங்கலம், டிச.2: எருமப்பட்டி அருகே தெருநாய்கள் கடித்ததில் மூதாட்டி உள்பட 2 பெண்கள் படுகாயமடைந்தனர். பட்டியில் கட்டியிருந்த 2 ஆடுகள் பலியானது.நமக்கல்  மாவட்டம் எருமப்பட்டி அடுத்த கோடாங்கிபட்டி சேர்ந்த விவசாயி ராஜ் மனைவி சுகுணா(45). நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றவரை, தெரு நாய் ஒன்று துரத்தி கடித்து  குதறியது. படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த  ஜெயம்மாள்(50) என்பவரையும் தெரு நாய் கடித்து குதறியது. மேலும்,  விவசாயிகள் சதாசிவம், ராஜ் ஆகியோரின் பட்டியில்  கட்டியிருந்த 2 ஆடுகளை, தெரு நாய்கள் கடித்தது. இதில் ஆடுகள் 2ம்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சத்தில்  உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Erumappatti ,
× RELATED எருமப்பட்டி அருகே பனைமரங்கள் வெட்டி சாய்ப்பு-போலீசார் விசாரணை