×

மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சாந்தி, தேசிய நெடுஞ்சாலை பெங்களூர் செயற்கைகோள் நகர்புற வளைவு சாலை(நிலஎடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சதீஸ், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். 2009ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் திருவள்ளூரில் துணை ஆட்சியராக(பயிற்சி) பணியில் சேர்ந்தார். பின்னர், 2010ம் ஆண்டு கிருஷ்ணகிரியிலும், 2012ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலும் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார். 2014ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2017ம் ஆண்டு முதல் சேலம் மாநகராட்சி ஆணையாளராகவும் பணியாற்றி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 10வது மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல், தனி மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா