×

காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 208.86 மெ.டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளது

புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை மாவட்டத்தில்208.86 மெ.டன் நெல்விதைகள்இருப்பில் உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசுகையில், தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன்காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 758.2மி.மீ. ஆகும். நவம்பர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழை அளவான 690.6 மி.மீ பதிலாக 709.2 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பைவிட 2 சதவீதம் கூடுதலாகும். நவம்பர் மாதத்தில் பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவு 145 மி.மீ ஆகும். ஆனால்; நவம்பர் மாதத்தில் பெறப்பட்ட மழையளவு 130.3 மி.மீ இதுவரை பதிவாகியுள்ளது.

மேலும் 2020-21ம் ஆண்டில் அக்டோபர் மாதம் முடிய நெல் 68,479 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள்1,6677எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1,805 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 7,938 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 999 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 29 எக்டர் பரப்பளவிலும், தென்னை 10,843 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 208.86 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 45.91 மெ.டன் பயறு விதைகளும், நிலக்கடலை 57.71 மெ.டன், சிறுதானியங்கள் 12.97 மெ.டன், எள் விதைகள் 4.021 மெ.டன் விதைகளும் இருப்பில் உள்ளது. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் வழங்கிடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 4,416 மெ.டன்னும், டிஏபி 923 மெ.டன்னும், பொட்டாஷ் 2,895 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 4,516 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் பொழுது கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு சென்று தங்களது கைரேகையினை பதிவுசெய்து உரம் வாங்கிடவும், மண்வள அட்டையில் பரிந்துரை செய்துள்ள உர அளவினை வாங்கி பயன்பெற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்தில்; விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல்-ஐஐஐஇ மக்காச்சோளம் - ஐஐஐஇ நிலக்கடலை, உளுந்து, கரும்பு மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திராமல் முன் கூட்டியேமுன்மொழிவுப் படிவம்,பதிவுப் படிவம்,அடங்கல் 2020-21,சிட்டா நகல்,வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் அட்டைநகல்ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்கள் ஆகியவற்றில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது