×

வெள்ளியணை அருகே துணிகரம் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: மர்ம நபருக்கு வலை

கரூர், டிச. 2: கரூர் வெள்ளியணை அருகே டூவீலரில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த நபர் செயினை திருட முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள டி.செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி(39). ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பைக்கில் இடையப்பட்டி பகுதியில் இருந்து வீட்டுக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். தேவகவுண்டனூர் பிரிவு அருகே வந்த போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஜோதியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றார். அவர் சத்தம் போடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து ஜோதி அளித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : venture girl ,silver lining ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து வெள்ளி...