×

பேருந்து நிலைய வளாகத்தில் ஆபத்தான நிலையில் தொங்கும் கடைகளின் மேற்கூரைகள்

கரூர், டிச. 2: கரூர் பேருந்து நிலைய வளாகத்தின் தென்புற பகுதியை முற்றிலும் சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் பேருந்து நிலைய வளாகத்தை சுற்றிலும் நகராட்சி சார்பில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தென்புற பகுதியில் உள்ள கடைகளின் மேற்கூரைகள் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு உள்ளன. அவ்வப்போது மேற்புற பகுதியில் இருந்து சிமெண்ட் துகள்கள் விழுந்து நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. ஆபத்தான நிலையில் தென்புற பகுதிகளின் நிலை உள்ளன. எனவே பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் விரைந்து இதனை சீரமைத்து அனைவரும் பயன்படும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : shops ,bus station premises ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி