×

ஹைவேவிஸ் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் சுற்றுலா சென்று திரும்பியபோது விபத்து

சின்னமனூர், டிச. 2: சின்னமனூர் அருகே, சுற்றுலா சென்று திரும்பிய வேன் ஹைவேவிஸ் மலைச்சாலையில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர் அருள்மணி (37). இவரது தலைமையில் 3 குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள், 10 பெரியவர்கள் மற்றும் வேன் டிரைவர் என 15 பேர் ஹைவேவிஸ் மேகமலை பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றனர். காலை 11 மணிக்கு தென்பழனி மலையடிவாரத்தில் வனத்துறை கேட்டில் அனுமதி பெறாமல் மேகமலை சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, கீழே இறங்கியுள்ளனர்.

டிரைவர் திருநாவுக்கரசு (50), வேனை வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது மலைச்சாலையில் 4வது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுற தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் திருநாவுக்கரசு, அருள்மணி (37), காளியம்மாள் (75), திருச்சியைச் சேர்ந்த தர்சினி (11) ஆகியோர் காயமடைந்தனர்.தகவலின்பேரில் சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேன் கவிழ்ந்த இடத்திற்கு 300 அடி பள்ளம் உள்ளது. நல்லவேளையாக வேன் கவிழ்ந்த இடத்திலேயே இருந்ததால் உயிரிழிப்புகள் தவிக்கப்பட்டன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Highways Hill ,accident ,trip ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...