×

திருவேங்கடத்தில் பரிதாபம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி காப்பாற்ற முயன்ற சகோதரி காயம்

திருவேங்கடம், டிச. 2: திருவேங்கடம் அங்காளஈஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் ராமர்(40) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(38). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். திருவேங்கடம் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய ராமர், மனைவி துவைத்து வைத்திருந்த துணிகளை அங்குள்ள கம்பிகொடியில் உலர வைக்க முயன்றார். அப்போது மின்விளக்கு எரிவதற்காக கம்பியில் சுற்றியிருந்த வயர் மூலம் கம்பியில் மின்சாரம் வந்தது. இதனை கவனிக்காமல் ராமர், துணிகளை உலர வைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற முயன்ற சகோதரி அங்கம்மாளும்(48) என்பவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

தகவலறிந்த திருவேங்கடம் எஸ்.ஐ. கமலாதேவி மற்றும் போலீசார் அங்கு சென்று படுகாயமடைந்த அங்கம்மாளை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமர் உடலை போலீசார் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்துதிருவேங்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Sister ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...