×

நாகை தெற்கு பொய்கை நல்லூர் பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா

நாகை, டிச.2: நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்காவின் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நடந்தது.நாகை அருகே தெற்கு பொய்கைநல்லூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. தர்ஹாவின் ஆண்டு கந்தூரி திருவிழா கடந்த 21ம் தேதி கொயேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. வழக்கமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் தாபூத்து எனப்படும் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடைகாரணமாக தர்கா உள்ளேயே சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சந்தனம் பூசும் வைபோகம் நடந்தது. முன்னதாக பாவா பக்ருதீன் ஆண்டவர் சமாதியில் சிறப்பு துவா ஓதப்பட்டு மலர்ப்போர்வை போர்த்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nagai South False Nallur Bawa Bahruddin Oliullah Dargah Kandoori Festival ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...