திருத்துறைப்பூண்டி, டிச.2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கனரக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு பொருத்துதல், ஒளிரும் பட்டை ஒட்டுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்துதல் மற்றும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி குறிப்பிட்ட நிறுவனங்களின் மட்டும் பொருத்தவேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் அக்ரோ சீனிவாசன், துணைத்தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை மோட்டர் வாகன ஆய்வாளர் அழகிரிசாமியிடம் வழங்கினர்.