×

திருவாரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் நாளை ஏலம்

திருவாரூர், டிச.2: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 177 வாகனங்கள் நாளை பொது ஏலத்தில் விடப்படுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் 30, இரண்டு சக்கர வாகனம் 146 மற்றும் 3 சக்கர வாகனம் ஒன்று என மொத்தம் 177 வாகனங்கள் நாளை 3ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதனையொட்டி திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் அனைத்தும் அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படுவதால் அதற்கு முன்னதாக ஏலம் எடுப்பவர்கள் வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur district ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...