×

விவசாயிகள் தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.2: டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு விவசாயிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், சேகர் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசாமி, ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மாலதி மற்றும் பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், பழனிவேல், நடராஜன், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருத்துறைப்பூண்டி:  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு சிஐடியூசி மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் நபி, நகர தலைவர் பவுன்ராஜ், நகர பொறுப்பாளர் செல்வம், டாஸ்மாக் சங்க மாவட்டதலைவர் லெனின், சுமை பணி தொழிலாளர் சங்க நகர தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : attack ,
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு