×

செஞ்சி அருகே சோகம் விஷம் குடித்து தம்பதி தற்கொலை

செஞ்சி, டிச. 2: செஞ்சி அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (64) விவசாயி. இவரது மனைவி குணசாலி (59). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குணசாலி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குணசாலி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்த சோகத்தால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் பூச்சி மருந்து குடித்துள்ளார். பின்னர் அவர் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்  இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Tragedy couple ,suicide ,Ginger ,
× RELATED காளான் கைமா