சாத்தான்குளம், டிச.1: சாத்தான்குளம் அருகே லாரியில் கடத்திய 40 மூடை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சாத்தான்குளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் எஸ்.ஐ வேல்ராஜ் உள்ளிட்ட போலீசார் விஜயராமபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை தடுத்துநிறுத்தி சோதனையிட்டனர். அதில் 100 கிலோ வீதம் 40 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனால், அப்போது லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த தூத்துக்குடி மாவட்ட பறக்கும் படை பிரிவு போலீசார், தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.