உடன்குடி,டிச.1: உடன்குடி அனல் மின்நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிறுவன பொதுமேலாளர் ராகேஷ்குமார் வாஸ்தவா தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் வரவேற்றார். மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற 13 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சுப்பையா நன்றி கூறினார்.