×

கஞ்சா விற்ற முதியவர் கைது

தேவாரம், நவ.30: போடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் போலீசார் தேவாரம் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தேவாரத்தில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப்இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தேவாரம் மூணான்டிபட்டியில் குடிநீர் தொட்டி அருகே, பிச்சை (60) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Elder ,
× RELATED நடுநெற்றிப் பௌர்ணமி-3