×

கருங்கடல் ஊராட்சி அலுவலக வளாகத்தில் ராணிமகாராஜபுரம் மக்கள் சாலை மறியல்

சாத்தான்குளம், நவ. 30: கருங்கடல் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. சாத்தான்குளம் அருகே கருங்கடல் ஊராட்சி மன்றத் தலைவராக பழனியப்பபுரத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி (49) இருந்து வருகிறார். இதனிடையே ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பொருட்டு ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சார்பில் பேட்டரியால் இயக்க கூடிய இரு ஆட்டோ வாகனம் வழங்கப்பட்டன.
இவ்விரு வாகனங்களையும் கடந்த 26ம்தேதி  பணிகளை முடிந்தபிறகு  ஊராட்சி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் விட்டுச் சென்றனர்.

மறுநாள் (27ம்தேதி) காலை ஊராட்சி செயலாளர் முருகேசன் அலுவலகம் வந்தபோது குப்பை சேகரிக்கும் ஆட்டோ வாகனங்கள் இரண்டும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. முன்பக்க மற்றும் புறப்பகுதியில் உள்ள  கண்ணாடி, மீட்டர், அதன் வயர்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து இது குறித்து ஊராட்சி தலைவர் நல்லத்தம்பி சாத்தான்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த எஸ்.ஐ முத்துமாரி, குப்பை சேகரிக்கும் வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை  தேடி வருகிறார்.

Tags : Ranimakarajapuram People ,blockade ,Road ,office premises ,Black Sea Panchayat ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி