சேலம், நவ.30: சேலம் காவேரி மருத்துவமனை வளாகத்தில், உலக சர்க்கரை நோய் தினத்திற்கான இலவச பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில், கொரோனா காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு கட்டுப்பாட்டு முறைக்கான விழிப்புணர்வு கண்காட்சியும் நடந்தது. இந்த முகாமில் சுமார் 120 பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.
பின்னர், சர்க்கரை அளவின்படி அவர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள், உணவுமுறை ஆலோசகரால் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு கண்காட்சியில் இருந்த சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. கொரோனா சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்றியமையாத ஒரு நிகழ்ச்சியாக இந்த முகாமையும், விழிப்புணர்வு கண்காட்சியையும், சேலம் காவேரி மருத்துவமனை நடத்தியது.