×

கண்மாயில் தேங்குமா மழைநீர்?

சிவகாசி, நவ.27: சிவகாசி ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் காய்ச்சல்காரம்மன் கோவில் வாறுகால் வழியாக கிருதுமால் ஓடையில் கலந்து மீனம்பட்டி கண்மாய் சென்றடைகிறது. இதனால் மழைநீர் வீணாகி வருகிறது. இந்த நீரை காரனேசன் விலக்கில் ஒரு செக் டேம் அமைத்து அருகில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள சிறுகுளம் கண்மாயில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை இல்லாத காலங்களில் செக்டேம் ஷட்டரை அடைத்து கழிவு நீர் கிருதுமால் ஓடைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ