சிவகாசி, நவ.27: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை அமைச்சர் ராஜேந்தி ரபாலாஜி நேற்று தொடக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தை பிறந்த பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.இதில் கலெக்டர் கண்ணன், சுகாதாரதுறை துணை இயக்குநர் ராம்கணேஷ், இணை இயக்குநர் மனோகரன், எம் புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வைரகுமார், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.