×

கடும் குளிரால் முதியவர் சாவு

திருச்சி, நவ. 27: திருச்சி மத்திய பஸ் நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே கடந்த 23ம் தேதி 55 வயது முதியவர் ஒருவர் கடும் குளிரில் பாதிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ உதவியாளர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி முதியவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிந்த கன்டோன்மென்ட் போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு