×

செல்போன் திருடிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, நவ.27: கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (32). இவர்,  கடந்த 8ம் தேதி கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கந்திக்குப்பம் அருகே  பெட்ரோல் பங்க் முன் டூவீலரில் நின்று கொண்டிருந்த போது, அங்கு  வந்த 2 வாலிபர்கள் வழி கேட்பது போல் நடித்து, திடீரென அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.  இதுகுறித்து, அப்பாஸ் கந்திக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்நிலையில், சூளகிரியில் உள்ள அப்பாஸின் நண்பரது கடைக்கு சென்ற அந்த வாலிபர்கள், செல்போனை பார்மட் செய்வதற்காக கொடுத்துள்ளனர். கடையின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், விரைந்த போலீசார் அவர்களை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.  இதையடுத்து சூளகிரி பெரியகுடியைச் சேர்ந்த திம்மராஜ்(20),  ஒட்டயன்கொட்டாயைச் சேர்ந்த அஜித்குமார்(20) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போனை  பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு