×

நாகர்கோவில் அருகே லாரி - பைக் மோதல் கல்லூரி மாணவர் பலி

ஈத்தாமொழி, நவ.27: நாகர்கோவில் அருகே பாம்பன்விளையில் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதால் பைக்கில் வந்த கல்லூரி மாணவர் நிலைதடுமாறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளிச்சந்தை அருகே உள்ள உன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் சத்திய சுதாகர்(21). நாகர்கோவில் அருகே ஒரு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பாம்பன்விளை அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதால், இவரது பைக் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சத்திய சுதாகர் படுகாயமடைந்தார்.

அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை கருணாகரன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர் திருநெல்வேலி, வடுகன்பட்டியை சேர்ந்த சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : College student ,Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு