×

எம்பி திருநாவுக்கரசர் பேட்டி திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம்

திருச்சி, நவ.25: திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இதில் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை திருச்சி மாவட்ட நீதிபதி ராஜசேகர் குடும்பத்தினர், ஜே.கே. மருத்துவமனை டாக்டர் மது குடும்பத்தினர், எம்.ஆர்.எஸ். மருத்துவமனை டாக்டர் கிருத்திகா குடும்பத்தினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி கிளை தலைவர் ஜோசப் பியுஸ், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Thirunavukkarasar Jewelery Exhibition Sales Launch ,Diamonds Showroom ,Trichy Malabar Gold ,
× RELATED மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்...