×

ரூ.1.5 கோடி நிதி மோசடி பெண் உள்பட 4 பேர் கைது

திண்டுக்கல், நவ.25: திண்டுக்கல்லில் ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.நிலக்கோட்டையில் ஆனந்த், ஜெயராஜ் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் அறக்கட்டளை நடத்தி வந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு ரூ.6,100 கட்டினால் போதும் எனக்கூறி 300க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடிக்கும் மேல் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஜெயராஜ்(51), ஆனந்த்(32), காசியம்மாள்(45), மகாலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராமகிருஷ்ணன், வடிவேலு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிதி நிறுவனத்தில் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு