×

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, நவ. 24: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17வது நினைவு தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினத்தையொட்டி கும்பகோணம் நாகேஷ்வரன் சாலையில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைத்திருந்த அவரது படத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தஞ்சை திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் து.செல்வம் தலைமை வகித்து முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள் அருளாநந்தசாமி, எல்.ஜி.அண்ணா, சண்.ராமநாதன், அஞ்சுகம் பூபதி, முரசொலி, கமலாரவி, செந்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். பட்டுக்கோட்டை: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டையில் முரசொலிமாறன் உருவ படத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் பார்த்திபன், ராமநாதன், கோவிந்தராஜ், சத்தியவிஜயன், நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக்கரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாபநாசத்தில் முரசொலிமாறன் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : Union Minister ,Murasoli Maran Memorial Day ,
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...