×

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூர், நவ. 24: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 17ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பெரம்பலூரில் திமுகவினர் மாவட்ட செயலாளர் குன் னம் இராஜேந்திரன் தலை மையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னால் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 17ம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலநிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்டபொருளாளர் ரவிச்சந்திரன், நகரச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பிரபாசெல்லப்பிள்ளை, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி, வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் அரணாரை ஜெயக்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Murasolimaran ,
× RELATED பெரம்பலூர், அரியலூர் கலெக்டர் தகவல்...