×

வேல் யாத்திரைக்கு தடை கோரி எஸ்பி அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.24: தேனியில் பாஜக.வின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் தேனி எஸ்பி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தேனி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மணி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் தமிழரசி, தலித் ராயன், நீலக்கண்ணன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக சார்பில் வருகிற 27ம் தேதி தேனியில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட போலீஸ் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Adithya Tamil ,protest ,office ,pilgrimage ,SP ,Vail ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...