கோவை,நவ.24: கோவையில் முரசொலி மாறன் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள், முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, வக்கீல் கே.எம்.தண்டபாணி, மெட்டல் மணி, இரா.கா.குமரேசன், வெ.நா.உதயகுமார், திராவிடமணி, கார்த்திக் செல்வராஜ், மார்க்கெட் மனோகரன், மு.ரா.செல்வராஜ், மு.மா.ச.முருகன், சேதுராமன், மீனா ஜெயக்குமார், கண்ணன், ஆனந்த், இளங்கோ, ராஜ ராஜேஸ்வரி, நா.மனோகரன், ஆனந்தன், ஆர்.எஸ்.புரம் பூபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் கோவை சரவணம்பட்டியில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமையில் நிர்வாகிகள், முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் வடவள்ளி சண்முகசுந்தரம், வடவள்ளி துரைசாமி, நந்தகுமார், ரகுபதி, கே.எம்.சுந்தரம், பி.வி.சுப்பிரமணியன், பத்மாலயா சீனிவாசன், கணேசமூர்த்தி, சுப்பையன், தியாகராஜன், சங்கனூர் ஆனந்தகுமார், அஞ்சுகம் பழனியப்பன், டி.கே.டி.சிவக்குமார், தெய்வம் மகாலட்சுமி, ஆர்.ஆர்.மோகன்குமார், மதனகோபால், சுதாவிமலன், பொன்னுசாமி, கே.எம்.ரவி, மதியழகன், அருள்குமார், சி.எம்.கிருஷ்ணகுமார், சுரேந்திரன், வீரபத்திரன் அருள்குமார், பார்த்திபன், தங்கவேலு, பழனிச்சாமி, கணேஷ், சண்முகம், ரங்கநாயகி, சரஸ்வதி புஷ்பராஜ், டி.டி.எஸ்.மூர்த்தி, சுரேஷ்குமார், இளங்கோவன், ஜீவா, விவேகானந்தன், ஜெயப்பிரகாஷ், பிரபு, கதிர்வேல், மோகன் ரங்கநாதன், மயில்சாமி, சோமசுந்தரம், சுக்குருல்லா பாபு, அரசூர் பூபதி, குரும்பபாளையம் நந்தகுமார், தினேஷ்குமார், திலீப், யஸ்வந்த் உள்பட பலர் பங்கேற்றனர். கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட திமுக அலுவலகத்தில், முரசொலி மாறன் படத்துக்கு நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.