×

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

திண்டிவனம், நவ. 24: திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண் அருகே உள்ள ஆவணிப்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ரவிபாபு(33), அதே பகுதியை சேர்ந்த வீரகாந்தன் மகன் மகேந்திரன்(31) ஆகிய இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் லதா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ரவி பாபுவை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மகேந்திரனை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு