×

பாபநாசம் அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட எஸ்ஐ சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு.

பாபநாசம், நவ.23: எலிபேஸ்ட் சாப்பிட்டஎஸ்ஐ சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றி வருபவர் தினேஷ் குமார் (40). அயல் பணியாக பாபநாசம் காவல் நிலையத்தில் கடந்த 4 மாத காலமாக பணியிலிருந்த தினேஷ் குமார் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக விடுப்பில் இருந்தார். கடந்த 20ம் தேதி பணியில் சேர்ந்த தினேஷ் குமார் அன்றே மதியம் எலி பேஸ்ட்டை சாப்பிட்டார். எலி பேஸ்ட்டை சாப்பிட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவரை அவ் வழியாக வந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அருகில் மெலட்டூரிலுள்ள வீட்டிற்கு கொண்டுப் போய் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்ெகன தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சையிலிருந்த தினேஷ் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.40 மணியளவில் இறந்தார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப் பட்டுள்ளதால், நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலில் இருந்து வந்த தினேஷ் குமார் தற்கொலை முடிவெடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : SI ,Papanasam ,
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’