×

பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு

நெல்லை, நவ.23: தாழையூத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் கவரிங் நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாழையூத்து  வஉசி நகரைச் சேர்ந்தவர் தங்கம்மாள் (55). நேற்று காலை இவர், தாழையூத்து பஜார் பகுதியில் நடந்து சென்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் தங்கம்மாள் அணிந்திருந்த செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். ஆனால் அவர் அணிந்திருந்தது, கவரிங் நகை என்பது தெரியவந்தது. இருப்பினும் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...