×

ரயில் பாதையில் பதுக்கி வைத்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

மதுரை, நவ. 23: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாதையில், வாழைத்தோப்பு பகுதியில்  கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ரயில்பாதை அருகில் மூட்டையில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக வாழைத்தோப்பை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (25), சக்திவேல் (24), மேல அனுப்பானடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (18) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த, பவ் (எ) பழனிமுருகன், தூத்துக்குடி தினேஷ், தவிடன் (எ) வேல்முருகன், சஞ்சய் மற்றும் சீனிவாசன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.  

மதுரை செல்லூர், தல்லாகுளம் பகுதிகளில், கடந்த இரு நாட்களில் மட்டும் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் தினசரி மூட்டை, மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைதாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு