×

அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுயநலத்துடன் செயல்படும் அமைச்சர்கள்

மதுரை, நவ. 23: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டவுடன் திருத்தங்களை மேற்கொள்வதற்காக உரிய படிவங்களை வழங்கி, திருத்தங்கள் செய்வதற்காக உள்ள முகாமில், திமுகவினர் செய்து வரும் பணிகளை பார்வையிட்டேன். முகவரி மாற்றம் செய்வது, தவறான வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டியதற்கு உரிய விவரங்களை உரிய படிவங்கள் மூலமாக இங்கு வழங்கினால் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு சேர்க்கப்படும்; நீக்கப்படும்; இடமாற்றங்கள் செய்யப்படும். அதிமுக அமைச்சர்களுடைய செயல்பாடுகள், சுயநலம் கருதியதாக உள்ளது.

ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வளவு லஞ்சம் பெறலாம், ஊழல் செய்யலாம் என்பதில்தான் அவர்களது கவனமிருக்கிறது. திட்டங்களை செம்மையாக செயல்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லை’ என்றார். நரிமேடு பகுதியில் உள்ள பொன்.முத்துராமலிங்கம் இல்லத்தில், அவரை முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன், பகுதி கழகச்செயலாளர் அக்ரி கணேசன், முன்னாள் அமைச்சர் தமிழரசி மற்றும் எஸ்ஸார் கோபி, பொன்.சேது, வல்லரசு பார்வர்டு பிளாக் அம்மாவாசி உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Ministers ,execution ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...