×

நீலகிரியில் 31 பேருக்கு கொரோனா

ஊட்டி, நவ.23: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,233 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,041 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 40 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 152 பேர் அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...