ஈரோடு, நவ. 23: ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங்குகள்(ரயில்வே கேட்) உள்ளன. இந்த கிராசிங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், வெண்டிபாளையம் ரயில்வே கிராசிங்குகளின் வழியாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடந்து செல்ல வசதியாக சப்-வே (நுழைவு பாலம்) கட்டுமான பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டு,