×

எலிபேஸ்ட் சாப்பிட்டு எஸ்ஐ தற்கொலை முயற்சி மருத்துவமனையில் சிகிச்சை

பாபநாசம் நவ 22: பாபநாசம் அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு எஸ்ஐ தற்ெகாலை முயற்சியில் ஈடுபட்டார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றி வருபவர் தினேஷ் குமார்(40.) அயல் பணியாக பாபநாசம் காவல் நிலையத்தில் கடந்த 4 மாத காலமாக பணியிலிருந்த தினேஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக விடுப்பில் இருந்தார். கடந்த 20ம்தேதி பணியில் சேர்ந்த தினேஷ்குமார் அன்றே மதியம் எலி பேஸ்ட்டை சாப்பிட்டார். எலி பேஸ்ட்டை சாப்பிட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அருகில் மெலட்டூரிலுள்ள வீட்டிற்கு கொண்டுப் போய் சேர்த்தனர்.

நேற்று அவரது உடல் நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்ெகன தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்குமார் ஏற்கனவே திருநெல்வேலிமாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினைதொடர்பாக நவம்பர் 20-ம் தேதிவிசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மாநில மனித உரிமைகள்ஆணையம் தினேஷ்குமாருக்கு சம்மன்வந்துள்ளது. ஆனால் அந்த விசாரணைக்கு ஆஜராகமால் பாபநாசம் காவல்நிலையத்தில்மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பணியிட மாறுதலில் வந்து இத்தனை மாதங்கள்; ஆகியும் இன்னும் நிம்மதிகிடைக்கவில்லையே, பழைய பிரச்சினைகள் நிழல்போல தொடர்கின்றனவே என்ற கவலைகாரணமாக, மன உளைச்சலில் தினேஷ்குமார்இருந்துள்ளார் என்றும், அதன் காரணமாக எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் காவல்துறையைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது