×

திருவையாறில் வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்

திருவையாறு.நவ.22: திருவையாறு சீனிவாசராவ்மேல்நிலைப்பள்ளியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக சோ்த்தல், திருத்தம், நீக்கம் செய்தல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்றது. இன்றும் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட வாக்காளா் பட்டியல் பார்வையாளரும் தமிழ்நாடு அருங்காட்சியக ஆணையருமான சண்முகம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்குதல், திருத்தம் ஆகிய விண்ணப்பங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் வேலுமணி, தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனா்.

ஆவணங்களின் நகலில் எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்றால் உண்மை ஆவணங்களை எடுத்து சென்று சரியான தகவல்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதற்கான ரசீதை பெற்று அனைத்து விவரங்களும் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். காலக்கெடு தேதிக்கு முன் இயற்கை இடர்பாடுகள் ஏதும் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டால் அதன்பிறகு காப்பீடு செய்ய இயலாது. எனவே கடைசி நாட்களில் விண்ணப்பிக்கலாம் என எண்ணிடாமல் உடனடியாக பதிவு செய்து கடைசி நேரத்தில் எதிர் கொள்ளும் பல்வேறு சிரமங்களைத் தவிர்க்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : voter enrollment camp ,Thiruvaiyar ,
× RELATED திருவையாறில் வாகன சோதனை: லாரியில் உரிய...