×

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

பெரம்பலூர், நவ 22: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்டக் கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக கரூர் மாவட்டச் செயலர் மணிகண்டன், துணை ஆணையாளர்களாக கரூர் மாவட்டத் தலைவர் மணிகண்டன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் செயல்பட்டனர்.இத்தேர்தலில், மாவட்டச் செயலராக மாநில துணைச் செயலர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவராக சந்திரசேகரன், பொருளாளராக புகழேந்தி,

மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக அண்ணாவு, புஷ்பாமேரி, மாவட்ட துணைத் தலைவர்களாக பாரதி, பாலச்சந்திரன், விஜயா, மாவட்ட துணைச் செயலராக ரவிச்சந்திரன், மணிவண்ணன், தங்கத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கலைச்செல்வி, கதிஜாபேகம், அருள்ஜோதி, பொற்கொடி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : Tamil Nadu Primary School Teachers' Alliance Administrators ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது