×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு 4 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

கரூர், நவ. 22: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளிலும் 2020ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

21 மற்றும் 22 ஆகிய நாட்களில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், வோட்டர் ஹெல்லைன் என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : camp ,constituencies ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...