விருதுநகர், நவ. 22: விருதுநகர் அருகே அழகாபுரியை சேர்ந்த கொண்டுசாமிக்கும் (65), அதே ஊரை சேர்ந்த திலகராஜூக்கும்(31) இடப்பிரச்சனை உள்ளது. நேற்று முன்தினம் கொண்டுசாமியை அவதூறாக பேசி, மண்வெட்டி கனையை எடுத்து வீசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கொண்டுசாமி சூலக்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.