×

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது

கோவை, நவ. 22: கோவையில் கொரோனா பாதிப்பில் இருந்து 190 பேர் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 190 பேர் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

சனிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் புதிதாக 148 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 35 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 748 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 35 வயது ஆண்,  இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது ஆண் ஆகியோர்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக உயர்ந்துள்ளது.

Tags : survivors ,Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...