×

சிறுமிகள் பலாத்கார வழக்கு வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை காவலில் எடுத்து விசாரணை

வில்லியனூர், நவ. 22:  சிறுமிகள் பலாத்கார வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தில் 5 சிறுமிகளை வாத்து பண்ணையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா உத்தரவின்பேரில் எஸ்பி திவ்யா தலைமையில் சிறப்பு குழு பணியமர்த்தப்பட்டு மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இவ்வழக்கில் வாத்து பண்ணை உரிமையாளரான கன்னியப்பன் (53), அவரது மகன்கள் ராஜ்குமார், சரத்குமார்(24) மற்றும் சிவா (23), அய்யனார் (22), மூர்த்தி (20) உள்பட 8 பேரை கைது செய்தனர். இதில் பசுபதி என்பவர் கோவிட் பரிசோதனைக்கு கதிர்காமத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். மற்றொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவ்வழக்கில் சிறுமியின் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் சிறுமியின் தாய் சாந்தி கொலைக்கும், இந்த பலாத்கார வழக்கிற்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் சேகரித்தார். சிறையில் அடைக்கப்பட்ட கன்னியப்பன் உள்பட 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மங்கலம் போலீசார் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 4 நாள் காவல் விசாரணைக்கு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நீதிமன்ற ஆணையுடன் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்ற எஸ்பி திவ்யா தலைமையிலான சிறப்பு குழுவினர், வாத்து பண்ணை உரிமையாளர், அவரது 2 மகன்கள் உள்பட 6 பேரையும் நேற்று காவலில் எடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வில்லியனூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது. சிறுமிகள் எந்தெந்த வகையில் துன்புறுத்தப்பட்டனர் என்பதற்கான தடயங்களை சேகரிக்க உள்ளனர். சிறுமிகள் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளிடம் போலீஸ் காவல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : duck farm ,owner ,rape ,girls ,
× RELATED புதுச்சேரியில் கொடூரம்: பாலியல்...