×

அரசு மருத்துவரிடம் தகராறு தந்தை, மகன் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, நவ. 22: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மோகன்ராஜ். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது அங்கு சிகிச்சைக்காக வந்த நத்தகாளி கிராமத்தை சேர்ந்த கணேசன்(54), இவருடைய மகன் மருது(28) ஆகிய இரண்டு பேரும் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் மருத்துவர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு