×

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

நாசரேத்,  நவ. 22: நாசரேத் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.  நாசரேத் அருகே கடையனோடை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெபராஜ் மகன் பிசிங்கர் (40). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 17ம்தேதி  அளவுக்கு அதிகமாக மது அருந்திய இவர் வீட்டில் மயங்கினார். இதையடுத்து மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுகுறித்து அவரது தாய் வைலட் (68) அளித்த புகாரின்பேரில் நாசரேத் ஏட்டு ரோஸ்லின் வழக்குப் பதிந்தார். இனஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : alcohol death ,
× RELATED பஞ்சாபில் போலி மது பரிதாபம் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது