×

42 சமையலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, நவ.22: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் 24 சமையலர் பணியிடங்களும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் 18 சமையலர் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்கான ஊதியம் ₹15,700 ஆகும். எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியிருனர் மற்றும் சமையல் பணியில் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பெற்று, அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் நேரில் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvannamalai District ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...