×

2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி திருவண்ணாமலைக்கு பார்சலில் வந்த

திருவண்ணாமலை, நவ.22: திருவண்ணாமலையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பார்சல் சர்வீஸ் லாரி மூலம் வந்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது, சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அந்த பெட்டிகளில் குறிப்பிட்டிருந்த முகவரிகளுக்கு, சென்று பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்ய ஆர்டர் அளித்தது யார் என்ற விபரங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...