×

போச்சம்பள்ளி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

போச்சம்பள்ளி, நவ.21:போச்சம்பள்ளி அருகே, நேற்று நடக்கவிருந்த 2 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகூடப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல்(27) என்ற வாலிபருக்கும், இருதரப்பு பெற்றோர் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்நிலையில், குழந்தை திருமணம் நடப்பது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு புகார் சென்றது. இதையடுத்து, போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அருண்குமார், விஏஓ சரவணன் ஆகியோர், திருமணம் நடக்கவிருந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், உரிய வயதை எட்டும் முன்பு திருமணம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 22 வயது வாலிபருக்கும் நேற்று நடக்கவிருந்த திருமணத்தையும், வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.

Tags : girls ,Pochampally ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்