×

திருவாரூர் மாவட்டத்தில் அரசின் அண்ணா விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

திருவாரூர், நவ.21: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் அண்ணா விருது பெறுவதற்கு தகுதியுடைய பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்திய அரசின் சார்பில் 2021ம் ஆண்டிற்கு குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் அண்ணா விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதிற்கு உயிர் மற்றும் சொத்து போன்றவற்றை காப்பாற்றுவதில் துணிச்சலான செயல்களை செய்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தகுதியானவர்கள் ஆவர்.

இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை http://award.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பதிவு செய்த பின்னர் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு இன்று 21ம் தேதி காலை 11 மணிக்குள் கிடைக்குமாறு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 04366 - 227158 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags : state ,Thiruvarur district ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...