×

மத்தியஅரசின் சட்டத்திருத்தங்களை கண்டித்து புதுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை.நவ.21: புதுக்கோட்டையில் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை எதிர்த்து சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், தொழிலாளர் திருத்த சட்ட தொகுப்பு, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2020 திருத்தச்சட்டம் இவைகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதே போல் மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வசித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜன், பொதுச்செயலாளர் சிங்கம், ஓய்வூதியர் சங்க நிர்வாகி திருநாவுக்கரசு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சுந்தரராசன், மாவட்ட தலைவர் முருகானந்தம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட தலைவர் சுப்புலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Roadside Traders Association ,Pudukottai ,government ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...