×

500 பேர் கைது பைக்குகள் மோதல்

அறந்தாங்கி, நவ.21: அறந்தாங்கி அருகே பைக்குடன் மற்றொரு பைக் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அறந்தாங்கி கல்லுப்பட்டரை சாலையைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(65). இவர் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊரான ஆவுடையார்கோவில் அருகே உள்ள கீழ்க்குடி புத்துவயலில் உள்ள அவரது வயல்களை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். கருங்காடு அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டிவந்த பைக் முத்துக்குமார் பைக்மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் இறந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...